டவுன் சிண்ட்ரோம் நோய் அல்ல. இது ஒரு மனநலிவு குரோமோசோம் குறைபாடு. இதை கருவில் கண்டுபிடிக்க முடியுமா? இது தாக்குவதற்கான காரணங்கள், அதற்கான அறிகுறிகள், தாக்கத்திற்கு ஆளானவர்களின் குணாதிசயங்கள், பரிசோதனைகள் பற்றிய தகவல்களை இங்கே தெளிவாக தெரிந்து கொள்ளலாம்..
டவுன் சிண்ட்ரோம் குறைபாடு ஆயிரத்தில் ஒருவருக்கு ஏற்பட்டுவிடுகின்றது. பொதுவாக உடலின் செல்களில் 46 குரோமோசம்கள் இடம் பெற்றிருக்க வேண்டும். ஆனால் இந்த குறைபாடிற்கு ஆளானவர்களுக்கு 21ஆவது ஜோடி குரோமோசோம்களில் கூடுதலாக ஒரு குரோமோசோம் இடம் பெற்றுவிடும். ஆக குறைபாடு தாக்கத்திற்கு ஆளானவர்களின் உடம்பில் 46 குரோமோசோம் என்று சரியான எண்ணிக்கைக்கு மாறாக 47 குரோமோசோம்கள் காணப்படும். இந்த மரபணு குறைபாடே டவுன் சின்ட்ரோம் என்னும் குறைபாடிற்குக் காரணமாகும். இந்த குறைபாட்டிற்கு ஆளானவர்களிடம் மனவளர்ச்சியின்மைக் காணப்படுகிறது.
இது தவிர டவுன்சிண்ட்ரோம் ஏற்பட வேறு என்னென்ன காரணங்கள் என்ன என்பதைக் கீழே அறிந்து கொள்வோம்.
இன்று பெரும்பாலானவர்கள் சிறந்த உணவுப் பழக்கங்களை கடைப்பிடிப்பது கிடையாது. கடையில் விற்கப்படும் துரித உணவுகள், பாக்கெட் செய்யப்பட்ட உணவுகள், நொறுக்குத் தீனிகள் என்று கிடைக்கும் உணவுகளை எல்லாம் எடுத்துக் கொள்கின்றனர். இவை அனைத்தும் சுவையை மட்டுமே தரும் வழியே எந்த விதமான ஆரோக்கிய நலன்களைத் தராது என்பதை அறிந்து கொள்ள வேண்டும். இவ்வகை பழக்க முறைகள் கூட ‘டவுன் சிண்ட்ரோம்’ ஏற்படக் காரணமாக அமைந்து விடுகிறது.
இன்று சுத்தமான காற்றைச் சுவாசிப்பது அரிதாகிவிட்டது. மரங்கள் குறைந்து விட்டன. வாகனங்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டே போகின்றது. பல்வேறு தொழிற்சாலைகள் தொடங்கப்படுகின்றன. அதனால் காற்று மிகவும் மாசடைந்து கிடக்கின்றது. இதனைத் தொடர்ச்சியாகச் சுவாசிப்பதும் டவுன் சிண்ட்ரோம் வர மறைமுக காரணியாக இருக்கலாம்.
ஒரு நாளைக்குக் குறைந்தபட்சம் 6 மணி நேரம் தூங்க வேண்டும். அதுவே உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது. இன்று பெரும்பாலானவர்கள் நள்ளிரவு தாண்டி தான் உறங்குகின்றனர். மொபைல் மற்றும் டிவி அவர்களின் தூக்க நேரத்தை ஆதிக்கம் செய்யத் தொடங்கிவிட்டன. இதுவும் மரபணு கோளாறுக்கான காரணியாக அமைகின்றது.
இதையும் படிங்க: 0-2 வயது வரை- குழந்தை வளர்ச்சி எப்படி இருக்கவேண்டும்?
இந்த இரண்டு தீய பழக்கங்களும் உடல் ஆரோக்கியத்திற்கு பல்வேறு கேடுகளை விளைவிக்கும். அந்த வகையில் மரபணு குறைபாடான டவுன் சிண்ட்ரோம் தாக்கத்திற்கும் இதுவும் காரணியாக அமைகின்றது.
டவுன் சிண்ட்ரோமால் பாதிக்கப்பட்ட குழந்தைகளிடம் பல்வேறு அறிகுறிகள் காணப்படும். அவை என்னென்ன என்று அறிந்து கொள்ளலாம்.
குறைபாடு தாக்கங்கள்
டவுன் சிண்ட்ரோம் குறைபாடால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு என்னென்ன நோய் தாக்க வாய்ப்பு உள்ளன என்பதை அறிந்து கொள்ளலாம்.
இதையும் படிங்க: நல்ல ஆரோக்கியமான குழந்தை எப்படி இருக்கும்?
பழக்கவழக்கங்கள்
இவர்களின் பழக்கவழக்கங்கள் எவ்வாறு உள்ளன என்று அறிந்து கொள்ளலாம்.
இந்த குறைபாடு தாக்குதலுக்கு ஆளானவர்களுக்கென்று சிறப்புப் பள்ளிகள் இருக்கின்றன.இருப்பினும் இவர்களை வேற்றுமைப்படுத்துவதை மருத்துவர்கள் பரிந்துரைப்பது இல்லை. சராசரி பள்ளிகளில் இவர்களை படிக்க அனுமதிக்கலாம் என்று கூறுகின்றனர்.
டவுன் சிண்ட்ரோம் பூரணமாக குணப்படுத்த வாய்ப்புகள் உள்ளதா என்று தெரிந்து கொள்ளலாம். இந்த குறைபாட்டைப் பூரணமாகக் குணப்படுத்த வாய்ப்பு இல்லை. இருப்பினும் அவ்வப்போது உரியச் சிகிச்சைகளைத் தொடர்ந்து எடுத்துக்கொள்ள வேண்டும். குறிப்பிட்ட காலக்கெடுவில் மருத்துவரின் பரிந்துரையின் பேரில் தைராய்டு சோதனை மற்றும் மற்ற சோதனைகளை மேற்கொள்ள வேண்டும்.
டவுன் சிண்ட்ரோம் பாதிப்பு உள்ளவர்கள் திருமணம் செய்து கொள்ளலாமா?
டவுன் சிண்ட்ரோமின் மிதமான தாக்கத்திற்கு ஆளானவர்கள் திருமணம் செய்து கொள்ளலாம். இதன் பாதிப்பிற்கு ஆளான ஆணாே பெண்ணோ வாலிப பருவத்தை எட்டிய பிறகு திருமணம் செய்து கொண்டு குடும்ப வாழ்க்கையில் ஈடுபடலாம். இது மாதிரியான மிதமான பாதிப்பிற்கு ஆளான பலர் திருமணம் செய்து கொண்டு மகிழ்ச்சியாக வாழ்கின்றனர் என்பது குறிப்பிடத் தகுந்தது. இந்த குறைபாடு ஒரு பரம்பரை வியாதி கிடையாது. அதனால் இவர்கள் தாராளமாக இல்லறம் மேற்கொண்டு குழந்தை பெற்றுக்கொள்ளலாம். இவர்களின் குழந்தைகளுக்கு இந்தக் குறைபாடு வர வாய்ப்பு கிடையாது.
என்னென்ன சோதனைகள் மூலம் முன்கூட்டியே கருவில் வளரும் குழந்தைக்கு டவுன் சிண்ட்ரோம் குறைபாடு தாக்கம் ஏற்பட்டுள்ளது என்பதை அறிய முடியும் என்று பார்க்கலாம்.தாயின் வயிற்றில் கருவாகக் குழந்தை இருக்கும் பொழுது இதன் தாக்கத்தைக் கண்டறிய இயலும்.கர்ப்பிணிப் பெண்கள் ஒரு எச்சரிக்கை நடவடிக்கையாக இந்த பரிசோதனைகளை மேற்கொள்வது மிகவும் நல்லது.
இரத்தப் பரிசோதனை
கர்ப்பிணிப் பெண்ணின் இரத்த மாதிரியை எடுத்து சோதனை செய்வதன் மூலம் இந்த குறைபாடு தாக்கத்தை அறிய இயலும்.
அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன்
இந்த சோதனை மூலமும் தாக்கத்தைக் கண்டுபிடிக்க இயலும். இந்த அதிநவீன ஸ்கேன் கருவியைக் கொண்டு குழந்தையின் மூளை வளர்ச்சியைச் சோதனை செய்ய இயலும்.
அம்னியோசென்டசிஸ்
ஒரு பெண் கருவுற்ற 10-வது வாரம் இதற்கான சோதனை மேற்கொள்ளப் படுகின்றது.இந்த பரிசோதனையின் பெயர் அம்னியோசென்டசிஸ்(amniocentesis).இந்த பரிசோதனை எவ்வாறு மேற்கொள்ளப்படுகிறது என்று அறிந்து கொள்ளலாம்.கருவறையில் குழந்தை மிதந்து கொண்டிருக்கும் திரவத்தில் சிறிதளவை ஊசியால் எடுத்து உரியப் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.
இதன் மூலம் குரோமோசோன் அளவு கண்டு பிடிக்கப்படுகிறது. இந்த பரிசோதனையின் முடிவில் குழந்தைக்கு டவுன்ஸ் சிண்ட்ரோம் தாக்கம் ஏற்பட்டுள்ளதாக அல்லது இல்லையா என்பதைத் தெளிவாக அறிந்து கொள்ள இயலும்.இந்த பரிசோதனைக்கான செலவு சற்று கூடுதலாகவே உள்ளது. அதனால் சில பெற்றோர்கள் இந்த பரிசோதனையைத் தவிர்த்துவிடுகின்றனர்.
ஆனால் இந்த மாதிரி கருவில் வளரும் குழந்தைகளுக்கு டவுன் சிண்ட்ரோம் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பதைச் சோதனையில் உறுதி செய்து கொண்ட பல பெற்றோர்கள் குழந்தைகளைக் கருவிலே களைத்து விடுகின்றனர்.இது ஒரு வேதனையான உண்மை.சற்று தாமதமான வயதில் கர்ப்பம் தரிக்கும் பெண்களின் குழந்தைகளுக்கு இந்த பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இருக்கின்றது.அதனால் பெண்கள் உரிய வயதில் கர்ப்பம் தரிப்பது ஏற்புடையது.
டவுன் சிண்ட்ரோம் குறைபாடு பற்றியும் அது தாக்குவதற்கான காரணங்கள்,அதன் அறிகுறிகள்,இதன் தாக்கத்திற்கு ஆளானவர்களின் குணாதிசயங்கள், பரிசோதனைகள் பற்றியும் மற்றும் மேலும் பல தகவல்கள் பற்றியும் தெளிவாக அறிந்திருப்பீர்கள் என்று நம்புகிறோம்.
Read Also: ஹீமோகுளோபின் என்றால் என்ன?
ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர இங்கே கிளிக் செய்யுங்கள். நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.
null
null