தடுப்பூசி பற்றி பெற்றோர் கேட்கும் கேள்விகள் & பதில்கள்!

தடுப்பூசி பற்றி பெற்றோர் கேட்கும் கேள்விகள் & பதில்கள்!

சுமார் 20 முதல் 30 ஆண்டுகளுக்கு முன்பு வரை தடுப்பூசி பற்றி பெரிதாக பேசப் படவில்லை. ஆனாலும், பெரும்பாலான மக்கள் ஆரோக்கியமாகவும் நலமாகவும், நல்ல ஆயுளோடும் வாழ்ந்தார்கள். இன்றோ, எங்கு திரும்பினாலும் தடுப்பூசி போட்டு விட்டீர்களா என்ற கேள்வியே மேலோங்கி உள்ளது. இன்று அனைத்து பெற்றோர்களும்,குழந்தைகளுக்கு தடுப்பூசி போட வேண்டும் என்ற எண்ணம் அதிகமாக உள்ளது. இதற்கு முக்கிய காரணம், தடுப்பூசி போட்டால், குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகி விடும், மேலும் குழந்தைகள் ஆரோக்கியமாக வளருவார்கள் என்பது தான்.

ஆனால் உலகில் உள்ள அனைத்து தடுப்பூசிகளையும் போட்டு விட வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. அவரவர் ஊர் மற்றும் நாடுகளுக்கு ஏற்றவாரு அரசு அல்லது மருத்துவர் பரிந்துரைக்கும் தடுப்பூசிகளை நீங்கள் தேர்வு செய்து உங்கள் குழந்தைகளுக்கு போடலாம்.

ஒரு சில நோய்களை வரும் முன் தடுக்கவே தடுப்பூசி பெரும்பாலும் போடப் படுகின்றது. எனினும், சில சமயங்களில், அப்படி போடவில்லை என்றாலும், அந்த நோய்கள் ஏற்படும் சாத்திய கூறுகள் குறைவே. ஒரு பாதுகாப்பு நடவடிக்கைக்காகவே இவ்வாறு பல தடுப்பூசிகள் போடப் படுகின்றது.

தடுப்பூசிக் குறித்து பல்வேறு விதமான குழப்பங்கள் பெற்றோர்களுக்கு நிலவி வருகிறது.தடுப்பூசிகளை பற்றி உங்களுக்கு சில விழிப்புணர்வை ஏற்படுத்தவும், உங்களுக்கு ஏற்பட்டுள்ள கேள்விகளுக்கு, பதில் தெரிந்து கொள்ளவும், மேலும் தொடர்ந்து படியுங்கள்;

1.தடுப்பூசி எப்போதும் பாதுகாப்பானதா?

தடுப்பூசி ஒரு சில நோய் எதிர்ப்பை அதிகப் படுத்தவே போடப் படுகின்றது. ஆனால், அதுவே சில சமயம் குழந்தைகளுக்கு உயிரை போக்கும் அளவிற்கு ஆபத்தானதாகவும் ஆகி விடுகின்றது. அதனால் பல பெற்றோர்கள், தேவைப் படும் ஒரு சில தடுப்பூசிகளை மட்டும் தேர்வு செய்து தங்கள் குழந்தைகளுக்கு போடுகின்றனர். மற்றவற்றை தவிர்த்து விடுகின்றனர். இது தடுப்பூசி முற்றிலும் பாதுகாப்பானது என்று கூறும் சாத்தியத்தை குறைகின்றது.

2. தடுப்பூசி என்ன செய்கின்றது?

தடுப்பூசி நோயை எதிர்த்து போராடுகின்றது. ஒவ்வொரு தடுப்பூசியிலும் ஒரு குறிப்பிட்ட இறந்த அல்லது பலவீனமான அந்த குறிப்பிட்ட நோய்க்கான பக்டீரியா இருக்கும். அதை உடலில் செலுத்தும் போது, உடல் அந்த குறிப்பிட்ட நோயை எதிர்த்து போராடும் விதத்தில் நோய் எதிர்ப்பு சக்த்தியை அதிகப் படுத்திக் கொள்ளும். இதனால், அந்த குழந்தை வளரும் பருவத்தில் அத்தகைய நோய் ஏற்படும் சூழல் நிலவும் போது அதனை எதிர்த்து உடல் ஆரோக்கியமாக இருக்க செய்யும். ஏனென்றால் குழந்தையின் உடலில் ஏற்கனவே அந்த வியாதிக்கான நோய் எதிர்பொருள் தோன்றி விட்டது.

3.தடுப்பூசி போடுவதால், குழந்தையின் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து விடுமா?

நிச்சயம் இல்லை. தடுப்பூசி போடுவதால் அம்மை, போன்ற வைரஸ்களால் ஏற்படும் நோய்கள் பெரிதும் தடுக்கப் படுகின்றது. ஒரு குறிப்பிட்ட வைரஸை எதிர்க்க தடுப்பூசி போடும் போது அது குழந்தையின் நோய் எதிர்ப்பு சக்தியை பாதிக்காது.

4.மற்ற குழந்தைகளுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்பதற்காக, என் குழந்தைக்கும் தடுப்பூசி போட வேண்டுமா?

இது பொதுவாக தேவை இல்லை என்று சொல்லலாம். ஆனால், உங்கள் குழந்தை பள்ளிக்கு செல்லும் போது, அங்கு வேறு குழந்தைக்கு ஏதாவது நோய் தொற்று ஏற்பட்டிருந்தால், அது உங்கள் குழந்தைக்கும் ஏற்படாது என்பதை உறுதியாக சொல்ல முடியாது. ஒரு வேளை உங்கள் குழந்தைக்கு இயற்கையாகவே நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருந்தால், அப்படி நீங்கள் போட வேண்டும் என்று அவசியம் இல்லை. ஆனால், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருந்தால், தடுப்பூசி போடுவது நல்லது.

5.ஒரே சமயத்தில் பல தடுப்பூசிகள் போடலாமா?

இது சற்று சிந்திக்க வேண்டிய விசயமே. பெரும்பாலும், அப்படி செய்யாமல் இருப்பது நல்லது. ஏனென்றால், சிறு குழந்தைக்கு உடலில் பல எதிர்ப்பு சக்திகளை உண்டாக்கும் மருந்துகள் ஒன்றாக உள்ளே செல்லும் போது அதனை எதிர்த்து செயல் பட உடலுக்கும் சக்தி தேவை. அப்படி இல்லை என்றால், அது நிச்சயம் உங்கள் குழந்தையின் உடல் நலத்தை பாதித்து விடும். அதனால், சரியான இடைவெளி விட்டே அடுத்தடுத்து தடுப்பூசி, தேவைப் பட்டால் போட வேண்டும். இல்லை என்றால் அத்விர்த்து விடுவது நல்லது.

6. நல்ல ஆரோக்கியத்தோடு இருக்கும் குழந்தைக்கு தடுப்பூசி போட வேண்டுமா?

தடுப்பூசி போடப்படுவதன் முக்கிய நோக்கமே, குழந்தை நோய் வந்து பின் மருந்து எடுத்துக் கொள்வதை விட, வரும் முன் தன்னை பாதுகாப்பாக காத்துக் கொள்ள தான். அதனால், இன்று உங்கள் குழந்தை ஆரோக்கியமாக இருந்தாலும், குழந்தை வளரும் பருவத்தில் ஏதாவது நோய்த் தொற்று ஏற்பட்டு பாதிப்பு அடையலாம். இதனால் குழந்தையின் நிலைமை மோசமாகும். இது மாதிரியான சூழலைத் தடுக்க சிறு வயதிலேயே அதற்கான தேவைகளை புரிந்து கொண்டு, சரியான ஆலோசனை பெற்று, தடுப்பூசி போட்டு விடுவது நல்லது.

7.தடுப்பூசி போடுவதால் உபாதைகள் ஏற்படுமா?

பெரும்பாலும், பல குழந்தைகளுக்கு தடுப்பூசி போட்டவுடன் சில உபாதைகள் ஏற்படும். குறிப்பாக சருமத்தில் தடிப்பு ஏற்படுதல், சுரம், வியர்வை போன்ற தொல்லைகள் வரக் கூடும். ஆனால் அது ஓரிரு நாட்களில் குணமடைந்து விடும். ஒரு வேளை அது தொடர்ந்தால் மருத்துவரை அணுகி உரிய ஆலோசனைகளைப் பெறவும்.

8.தடுப்பூசி போடுவதால் மன நலம் குன்றி விடுமா?

பொதுவாக அப்படி நடப்பதில்லை. எனினும், ஒருவேளை குழந்தைக்கு பிறக்கும் போதே அல்லது மரபு வழியில் ஏதாவது பிரச்சனை இருந்தால் அந்த குழந்தைக்கு மன நல பிரச்சனைகள் ஏற்படலாம். உங்களுக்கு இது குறித்து மேலும் சந்தேகம் இருந்தால், மருத்துவரின் ஆலோசனையை பெறவும்.அதுவே எந்த சிக்கலும் ஏற்படாமல் இருக்க வழி வகை செய்யும்.

9.எந்தெந்த நோய் எதிர்பிற்காக தடுப்பூசி போடப் படுகின்றது?

தட்டம்மை, வூப்பிங் இருமல், போலியோ, டெட்டனஸ், ரோட்டா வைரஸ், ஹெபடைடிஸ் ஏ, ஹெபடைடிஸ் பி, சிக்கன் பாக்ஸ், இன்ஃப்ளூயன்ஸா போன்ற பல்வேறு நோய் எதிர்பிற்காக தடுப்பூசி போடப் படுகின்றது.

10. தடுப்பூசி போடுவதற்குப் பதிலாக வேறு மாற்று நோய் எதிர்ப்பு வழிகள் உள்ளதா?

உள்ளது.அது தாய்ப்பால் ஒன்று மட்டுமே. ஆனால் இன்று பெரும்பாலான குழந்தைகள் பார்முலா பால் குடித்துதான் வளருகின்றார்கள். அதனால் அவர்களுக்கு போதுமான நோய் எதிர்ப்பு சக்தி உடலில் இருப்பதில்லை. இந்த காரணத்தாலேயே, குழந்தைக்கு தடுப்பூசி போட வேண்டியது அவசியமான சூழல் பெரும்பாலும் ஏற்படுகின்றது. மேலும் தாய்ப்பால் கொடுக்கும் தாயும் ஆரோக்கியமானவராகவும், நல்ல நோய் எதிர்ப்பு சக்தி கொண்டவராகவும் இருக்க வேண்டும்.

11.எத்தனை தடுப்பூசி போட வேண்டும்?

தற்போது குழந்தைகளுக்கு 14 தடுப்பூசிகள் போட வேண்டும் என்று ஒரு பட்டியல் இருந்தாலும், அவை அனைத்தையும் போட வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஆனால் ஒன்று முதல் இரண்டு வயது வரை இருக்கும் குழந்தைகளுக்கு நிச்சயம் மருத்துவரால் குறிப்பிடப் படும் தடுப்பூசிகள் போட வேண்டும். மற்ற தடுப்பூசிகள் போடுவது உங்கள் விருப்பத்தை பொறுத்தே உள்ளது.

12. தடுப்பூசிகள் விலை உயர்ந்ததாக இருக்குமா?

தடுப்பூசிகளை தனியார் மருத்துவமனைகளில் போட்டால் நிச்சயம் அது விலை உயர்ந்ததாக இருக்கும். ஆனால், நீங்கள் அரசு மருத்துவமனையில் உங்கள் குழந்தைகளுக்கு அதே தடுப்பூசிகளை இலவசமாகவோ அல்லது மிக குறைந்த விலையிலோ போட்டு கொள்ளலாம்.

தடுப்பூசிகள் போடுவதால் பல நன்மைகள் இருந்தாலும், இன்று மக்களுக்கிடையே நல்ல விழிப்புணர்வு ஏற்பட்டுக் கொண்டிருகின்றது. ஒவ்வொரு நோய்க்கும் தேடிச் சென்று தடுப்பூசி போடுவது ஒரு புறம் இருந்தாலும், நீங்கள் உங்கள் குழந்தைகளுக்கு சரியான மற்றும் ரசாயனம் கலக்காத சத்தான உணவை தந்தாலே எந்த நோயும் அண்டாது. மேலும் அது அந்த குழந்தை நல்ல ஆரோக்கியத்தோடும் வளர உதவும். ஒரு குறிப்பிட்ட நோயை தடுக்கத்தான் தடுப்பூசிப் போடப் படுகின்றது. ஆனால் பொதுவாக எந்த நோயும் ஏற்படாது என்று கூற முடியாது. அதனால், முடிந்த வரை உங்கள் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்து, வளரும் பருவத்திலே சத்தான உணவுகளை தேர்ந்து எடுத்துக் கொடுத்து வந்தால், உங்கள் குழந்தை நீண்ட ஆயுள் மற்றும் நல்ல ஆரோக்கியத்தோடும் இருக்க நிறைய சாத்தியம் உள்ளது.

இதையும் படிக்க : வீசிங், ஆஸ்துமா இருப்பவர்கள் எதை சாப்பிடலாம்? எதை சாப்பிட கூடாது?

 

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர இங்கே கிளிக் செய்யுங்கள். நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

null

null